11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 62 வயது சந்தேக நபர் உயிர்மாய்ப்பு!

27 0

 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவராவார்.

பாதிக்கப்பட்ட 11 வயது  சிறுமி குறித்த சந்தேக நபரின் அயல் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் , சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் சிறுமியிடம் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்த நிலையில் தாய் அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மேலும் உயிரிழந்த சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சாகோதரியையும் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.