நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பாவம் எனவும் அவர் பொதுஜன பெரமுனவிற்கு வந்தால் அவரை மஹிந்த ராஜபக்ச ஏற்பார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு பெரமுனவின் கதவு திறக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சரத் பொன்சேகா வந்து கதைத்தால், மஹிந்த நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.
முடியாது எனக்கூறி அவரை விரட்ட மாட்டார்.
எது எப்படி இருந்தாலும் பொன்சேகா பாவம் என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.