ஆபத்தான இரசாயனப் பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை செய்தவர்கள் கைது

29 0

ஆபத்தான இரசாயன பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை , வத்தளை மற்றும் கலகெடிஹேன உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 22,25,45,52 வயதுடையவர்களாவர்.

இதன்போது ஆபத்தான இரசாயன பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை செய்த 4 விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1,143 வகையான கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.