பூசா சிறைச்சாலையின் கைதிகளின் கூண்டில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் , இலத்திரனியல் உபகரணங்கள் மீட்பு

30 0

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளின் கூண்டுக்குள் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உயிரிழந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ” கொஸ்கொடை தாரக ” வின் சகோதரன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ” ருவுல் குமார ” ஆகியோரின் சிறைக் கைதிகளின் கூண்டில் இருந்தே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூசா சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.