10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஜனாதிபதியால் திறப்பு

141 0

இலங்கை சாரணர இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

மாற்றத்துக்கான தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெப்ரவரி 20 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கும் தேசிய சாரணர் ஜம்போரியில் 11,500 உள்நாட்டு, வௌிநாட்டு சாரணர்கள் பங்குபற்றினர். இம்முறை பெண்கள் சாரணர்களை பிரதிநிதித்துவப்படும் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, சிறுவர் சாரணர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதம சாரணர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஜனப்பித் பெர்னாண்டோ ஜம்போரி கழுத்துப் பட்டி மற்றும் பதக்கம் அணிவித்து வரவேற்பளித்தார்.

இதன்போது தேசிய சாரணர் ஜம்போரியை முன்னிட்டு முத்திரையொன்று வௌியிடப்பட்டதோடு, மாவட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சஞ்சிகைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இலங்கை சாரணர் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சீருடையை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் பிரதம சாரணர் சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்னாண்டோவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சீருடையை வழங்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.