காலிமுகத்திடலில் அரகலய இடம்பெற்ற பகுதியில் சூதாட்ட விடுதி – நாடாளுமன்றத்தில் விஜிதஹேரத்

33 0

காலிமுகத்திடலில் கோட்டா கோகமபகுதியை கசினோமையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஜேவிபியின் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரகலய இடம்பெற்ற பகுதியில் சீன பெயர் ஒன்றை கொண்ட நிறுவனம் கசினோ விடுதியை அமைப்பதற்கு அனுமதி கோரியுள்ளது அரசாங்கம் நகரஅபிவிருத்தி அதிகாரசபை மூலம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பை சேர்ந்த பிரபல சூதாட்டவர்த்தகர் இதன் பின்னணியில் உள்ளார் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

அரகலய என்பது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என தெரிவித்துள்ள விஜிதஹேரத் அரகலயவில் ஈடுபட்டவர்களை பழிவாங்குவதற்காக அரசாங்கம் இதனை செய்கின்றது இது பெருந்தவறு என குறிப்பிட்டுள்ளார்.