இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சுங்கப் பரிசோதகர் பதவிக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சைக்கு ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்களுடன் பரீட்சைக்குத் தோற்றவிருந்த ஒருவரை அநுராதபுரம் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இகிரிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் நேற்று (17) நடைபெற்ற சுங்கத் திணைக்களத்தின் 2ஆம் தர சுங்க பரிசோதகர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு இவர் தோற்றவிருந்தார்.
கைது செய்யப்பட்டவர் பரீட்சைக்கு தோற்றவிருந்த சட்டபூர்வ விண்ணப்பதாரரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

