கசிப்பு அருந்திய மாணவன் பாடசாலையில் சுகயீனமுற்றதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்!

202 0

பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று  (14)  இந்த மாணவனுக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான  வீதியில் வைத்து தான்  கசிப்பு அருந்தியதாக கூறினார்.

இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தான்  கசிப்பு அருந்தியதனை குறித்த மாணவன்  வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன.