சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் : சரணடைந்த மேலும் 6 மாணவர்கள் கைது!

118 0

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவரையும் மேலும் இரு மாணவர்களையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 6 சிரேஷ்ட மாணவர்களை  சமனலவெவ  பொலிஸார் இன்று புதன்கிழமை (14) கைது செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இரவு உணவகத்தில் இந்தத் தாக்குதல்  இடம்பெற்றதாகவும், இதன்போது  ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைக்கு  அழைத்துச்  செல்லப்பட்டதாகவும் சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 7 சிரேஷ்ட மாணவர்கள் முன்னர்  கைது செய்யப்பட்டு பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக  சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆறு சிரேஷ்ட மாணவர்களும் சமனலவெவ பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.