தெல்லிப்பழையில் ட்ரோனுடன் ஒருவர் கைது

51 0

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல், ட்ரோன் கமராவை பறக்க விட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.