வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் தம்பதிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 58 மற்றும் 54 வயதுடைய தம்பதிகளாவர்.
மனைவி காசநோயினால் பாதிக்கப்பட்டு பல காலமாக சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் கணவர் மனைவிக்கு விஷம் பானத்தை அருந்த கொடுத்து தானும் அருந்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

