சிவில் குற்றங்களில் ஈடுபடும் அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டம்

140 0

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சிவில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வழங்கிய பின்னர், சட்ட வரைவுப் பிரிவினால் அதற்கான சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பணிகள் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஐந்தவருடமே  சட்டமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகம் 05 மில்லியன் ரூபா பெறுமதியான பேக்கரி உபகரணங்களை பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலைக்கு கடந்த சனிக்கிழமை (03) வழங்கியதன் பின்னர் கைதிகளுக்கான பேக்கரி பயிற்சிப் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், பிணை  சட்டம் போன்ற பல சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், மேலும் வீட்டுக் காவலில் வைக்கப்படுபவர் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படுவார்களா ? என்பதையும், சிறை மற்றும் அருகிலுள்ள பொலிஸ்  நிலையத்தால் இதைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சிறைச்சாலைகளில் சுமார் 13,000 கைதிகள் தங்குவதற்கு இடவசதி உள்ளதாகவும், ஆனால் நீதி நடவடிக்கையின் மூலம் நாளாந்தம் கைது செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை 33,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சிறையில் உள்ள கைதிகளில் 65% பேர் மட்டுமே போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் என்றும், அவர்களை மீண்டும் சமூகத்தில் விடுவிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களுக்கு சில தொழில் பயிற்சிகளை வழங்குவதே அரசின் நோக்கம் என்றும்  அமைச்சர்  கூறினார்.

சிவில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் கழிப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது சிறைச்சாலையில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.

குற்றச் செயல்கள் உட்பட பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் விடுவிக்க சிறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு குறித்து சமூகத்தில் சரியான பாராட்டு உள்ளதா? என்பது கேள்விக்குறியே.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமன்றி அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு உள்ளது என்றார்.

சிறைச்சாலைகள் திணைக்களமும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி வருவதாகவும், அதற்கான அறிக்கையைப் பெறுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அவ்வாறு  அறிக்கை கிடைத்தவுடன், அடுத்த பதினைந்து நாட்களில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், அதற்காக இரண்டு விசேட  இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீவ விஜேசேகர, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் ஐ.ஜி.பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.