இலங்கைக்கு வெற்றி – பங்களாதேஷ் அணித் தலைவர் விலகுவதாக அறிவிப்பு

222 0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று இரவு இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி, 6 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இதேவேளை, நேற்றைய போட்டியின்போது, பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மூர்தஸா, 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளிலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கையுடனான 20 க்கு 20 தொடரே தமது இறுதி 20 க்கு 20 போட்டி என்றும் பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மூர்தஸா தெரிவித்துள்ளார்.