கெஹெலிய படுகொலையில் ஈடுபட்டுள்ளார்

58 0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இம்யுனோகுளோபுளின்   மோசடி ஒரு படுகொலை நடவடிக்கை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தரம்குறைந்த இம்யுனோகுளோபுளினை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் படுகொலையில் ஈடுபட்டுள்ளார் எனகருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மருந்துகளை இறக்குமதிசெய்துள்ளதுடன் நாட்டின் அப்பாவி மக்களிற்கு அவற்றை வழங்கியுள்ளார் என ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் இதன்காரணமாக உயிரிழந்தனர் என்பது எங்களிற்கு தெரியாது ஆகவே இந்த விவகாரம் குறித்து நாங்கள் மேலும் ஆராயவேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் படுகொலைகள் போன்றது இது என கருதவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லரும் விசஊசியை செலுத்தி மக்களை கொன்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கெஹெலியவிற்கு வழங்கப்படும் தண்டனை இலங்கையில் அரசியல்வாதியொருவருக்கு வழங்கப்பட்ம மிகச்சிறந்த தண்டனையாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது நோய் அறிகுறிகளை பரிசோதிப்பதற்காக தடுப்புமருந்துகளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல்வாதிகள் மோசடி ஊழலில் ஈடுபடுவது குறித்து வெட்கப்படுவதில்லை சிறைக்கு சென்றபின்னரே அவர்கள் நோய்அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.