660 பேர் கைது

27 0

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போதை ஒழிப்பு நோக்கிலான ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் இன்று (04) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 552 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர். ஒருவர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைதானவர்களில் 108 பேர் பொலிஸாரால் வேறு சில குற்ற வழக்குகள் தொடர்பில் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் ஆவர்.

அத்தோடு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள  3 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சந்தேக நபர்களிடமிருந்து 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ், 4 கிலோ 150 கிராம் கஞ்சா, 775 கஞ்சா செடிகள், 192,826 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.