விருந்துபசாரத்தில் மோதல்: ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை!

29 0

மத்துகம வெலிகட்டிய சந்தசிரிகம பிரதேச  வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த மதுஷன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுபான விருந்தில் கலந்து கொண்ட மத்துகம வெலிகட்டிய சந்தசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.