அம்பாறையில் கரி நாள் போராட்டம்

49 0

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றைய தினம் (04) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கறுப்பு தின போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன் அடிப்படையிலேயே இந்த கறுப்பு தின போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.