நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல

108 0

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை  காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்தனர்.

இந்நிலையிலேயே அவர் இன்று சனிக்கிழமை (03) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.