அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் 08ஆம் 09ஆம் திகதிகளில்

33 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வியாழக்கிழமை (01) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பாேதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

அதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும்  07ஆம் திகதி  ஜனாதிபதி தலைமையில் வைபரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதுடன், அன்றையதினம் பாராளுமன்றத்துக்குத் தலைமை தாங்கும் ஜனாதிபதியினால்  காலை 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளது. கொள்கை பிரகடன உரையை தொடர்ந்து பாராளுமன்றம் மறுநாள் காலை 9,30 மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படும்.

அதற்கமைய மறுநாள் 08ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை  ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள  அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான   சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.