நீதிமன்ற அவமதிப்பு : சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்களின் விசாரணை பெப்ரவரி 2 இல்!

164 0

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பெப்ரவரி 2ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான சனத் நிஷாந்த தற்போது இறந்துவிட்டதால், அவமதிப்பு மனுக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காகவே வழக்கை எதிர்வரும் 2ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.