அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்ட மூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை (30) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் செயல்வலுபெறுதலும் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருகின்றன.
இதேவேளை பாராளுமன்றத்தில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இதுவரை கைச்சாத்திட்டு சான்றுரைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

