கொலை முயற்சிக்காக காரொன்றில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு சென்ற இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் 46 மற்றும் 29 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 28 தோட்டாக்கள், 2 வாள்கள், 2 கைக்குண்டுகள், 11 கிராம் ஹெரோயின் , துப்பாக்கி , கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 5 வாள்கள், 2துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

