கொலை முயற்சி ; வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

118 0

கொலை முயற்சிக்காக  காரொன்றில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு சென்ற  இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதானவர்கள் 46 மற்றும் 29 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 28 தோட்டாக்கள், 2 வாள்கள், 2 கைக்குண்டுகள்,  11 கிராம் ஹெரோயின் , துப்பாக்கி  , கார்  என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்  5 வாள்கள், 2துப்பாக்கிகள்  என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.