திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

222 0

திருகோணமலை – 3ம் கட்டை பிரதேசத்தில் 8 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை காவற்துறை கைது செய்துள்ளது.

நேற்று இரவு 7.00 மணியளவில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை உப்புவெளி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்ட நால்வரும் திருகோணமலை தேவா நகர்,புளியங்குள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் அனைவரும் 19 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.