வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை

240 0

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின்  10வது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் பரிசீலிக் கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்கான திகதியிடுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சந்தேகநபர் தாம் குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக் கப்பட்டு உள்ளேன். இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா? என கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை இன்றைய தினம் வரை ஒத்திவைத்த நீதிபதி , இன்றைய தினம் குறித்த சந்தேக நபரின் பிணை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.