கம்பஹா – அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் இளம் வழக்கறிஞர் ஒருவரை சிரேஷ்ட பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஐவர் தாக்கியுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.