புராதன விகாரையில் துப்பாக்கிச்சூடு!

145 0

குருநாகல் தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
விடுதியில் வேறு இடத்தில் தேரர் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.