உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் கைது

73 0

உள்ளூரில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவில் மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 42, 54 வயதுடையவர்கள் ஆவர்.

திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருக்கோவில் விநாயகபுரம் பொலிஸ் பிரிவுக்குள் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கியை உற்பத்தி செய்தவர், துப்பாக்கியை வைத்திருந்தவர் மற்றும் ஆயுத உற்பத்திக்கு துணையாக இருந்தவர் என 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக்குழாய்கள் இரும்பு வெட்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.