கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டம்-நெதர்லாந்து.

86 0

நெதர்லாந்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டம் 13-01-2014 சனி அன்று உத்திரக்ற் பிரதேசத்தில் மிக சிறப்படன் நடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலலைத் தொடர்ந்;து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர் வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியது. பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்ற மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்ற இச் சுற்றுப் பொட்டி சுமார் 17.00 மணியளவில் வெற்றி பெற்ற கழகங்களிற்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடி கையேற்கப்பட்டு எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.

வெற்றி பெற்ற கழகங்களின் விபரங்கள்.

முதலாமிடம் பிறேடா விளையாட்டுக் கழகம்.
இரண்டாமிடம் பெல்ஜியம் இளம்புயல்கள் விளையாட்டுக் கழகம்.