நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

216 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாதென  முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும்  பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த அவர்   புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலையற்றிருக்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பளிக்கும் உறுதியான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் எவ்வளவோ திணைக்களங்கள் அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளன எனவும்  பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை மட்டும்தான் வழங்க வேண்டும் என்றில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக  கைதட்டிக்கொண்டு நிற்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் அழிந்து கொண்டிருக்கும் வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீளக் கட்டியெழுப்பினாலே பல நூற்றுக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.