நீதிமன்ற அழைப்பாணை வழங்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர்கள் கைது

43 0

ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு நீதிமன்ற அழைப்பாணையை வழங்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் அத்துருகிரிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பான வழக்கு ஒன்றின் நீதிமன்ற அழைப்பாணையை வழங்குவதற்காக சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்கள் வீட்டிற்குள் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்ற அழைப்பாணை தொடர்பில் சந்தேக நபரிடம் தகவல் கோரிய போது அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரின் அந்தரங்க உறுப்பின் மீது தாக்கியுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அத்துருகிரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.