வெளிநாடு சென்ற மகளின் நிலை குறித்து விசாரிக்கச் சென்ற தாய்

52 0
வெளிநாட்டுக்கு வேலைபெற்றுச் சென்ற தனது மகளின் நிலை குறித்து விசாரிக்க சென்ற தாய் மீது வெளிநாட்டு முகவர் நிலைய ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குருணாகல் பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையமொன்றின் மூலம் குவைத் நாட்டுக்கு சென்ற மகளை பற்றி விசாரிக்கச் சென்ற தாயை அந்நிறுவன ஊழியர்கள் தாக்கியுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தாய் இது தொடர்பில் குருணாகல் பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து குருணாகல் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, சவூதி அரேபியாவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட 40 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயின் சடலம்  நேற்று (12)இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.