யுக்திய நடவடிக்கையில் கைதான 771 பேர்

41 0

யுக்திய  நடவடிக்கையுடன் இணைந்து கடந்த 24 மணித்தியாலங்களில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்  23  பேர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு  மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட 7 பேர்  போதைக்கு அடிமையானவர்கள்  என கண்டறியப்பட்ட நிலையில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 மாத்திரைகள்  என்பனவும் கைப்பற்றப்பட்டன.