ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் கைது!

55 0

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்  பொலிஸ் விசேட  அதிரடிப்படை கான்ஸ்டபிள் ஒருவர் மாத்தறை பொல்ஹேனவில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பசறை முகாமில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுமுறையிலிருந்த இந்த கான்ஸ்டபிள், ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்  மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.