அனுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் நேற்று புதன்கிழமை (10) ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அனுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த “சோனி” என்ற பிரபல வர்த்தகரின் 32 வயதுடைய மகனாவார்.
ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்திலிருந்து 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் தனது தந்தையின் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து தபால் மூலமாக போதைப்பொருளை கடத்தி அவற்றை பொதிகளாக தயாரித்து வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

