இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் சந்தேகத்தில் 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பஸ்வண்டிகளில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழ் இறக்கி அவர்களையும் அவர்களது உடமைகள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடும் நடவடிக்கை காலை 6 மணிவரை மேற்கொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பிரயாணித்த 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட வுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.