மட்டக்களப்பில் வாகனங்கள் தீவிர சோதனை – 3 பேர் கைது

49 0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசேட அதிரடிப்படையுடன்  இணைந்து யுக்தி நடவடிக்கையின் கீழ் போதை பொருளை கடத்துபவர்களை தேடி நகருக்குள் உள் நுழையும் பஸ் வண்டிகள் மற்றும் வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் சந்தேகத்தில் 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது பஸ்வண்டிகளில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழ் இறக்கி அவர்களையும் அவர்களது  உடமைகள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடும் நடவடிக்கை காலை 6 மணிவரை மேற்கொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பிரயாணித்த 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட வுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.