அரசியல் களத்தில் பெண்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்

135 0

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் நடைமுறைகளுக்கான தேவையை வலியுறுத்தும் மற்றும் அவற்றைக் கண்காணிக்கும் பஃரல் அமைப்பின் ” இளைஞர்களுக்கான ஜனநாயக கல்விக்கூட” மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட,  கிராம மட்ட பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆளுமைகளுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று இக்கற்கைக்கான பஃரலின் ஆலோசகர் திரு. சொர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) ஆரையம்பதி பல்நோக்கு கூட்டுறவு சங்க மண்டபம், மட்டக்களப்பில் நடைபெற்றது.

பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தி எதிர்கால தேர்தல்களில் அவர்களின் அங்கத்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட இச்செயற்றிட்டத்தில் ,முன்னாள் பெண் வேட்பாளர்கள் உட்பட பிற தலைவர்களும் தமது அனுபங்களையும் அறிவுரைகளையும் பகிர்ந்து கொண்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.