சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (04) யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமான கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பாக அரசியல் ஆலோசகர் ஜோதிலிங்கம், வடக்கு மாகாண கடற்றொழில் சமாசம் சார்பாக அ.அன்னராசா, தந்தை செல்வநாயகம் அறக்கட்டளையினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு கையெழுத்திட்ட மகஜரானது யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி ரணிலிடம் கையளிக்கப்படவுள்ளது.








