விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட ஹேஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

152 0
இத்தாலியிலிருந்து ஹோமாகமை பிரதேசத்திலுள்ள முகவரி ஒன்றிற்கு விமான தபால் சேவை மூலம் உணவுப் பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட 6 கோடியே 13 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ்  போதைப்பொருள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பொதியானது சீதுவையில் உள்ள நிறுவனம் மூலம் விமான தபால் சேவை வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள வந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொதியிலிருந்து 4 கிராம் 919 மில்லி கிராம் நிறையுடைய ஹேஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.