எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி – யாழில் ‘சரிகமபா’ புகழ் அசானி

47 0
எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் என ‘சரிகமபா’ புகழ் அசானி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக வருகை தந்த அசானி, யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஊடகங்களுக்கும் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக வந்துள்ளேன். நல்லூர் ஆலயம் உள்ளிட்ட சில இடங்களுக்கு சென்றிருந்தேன். யாழில் எனக்கு அளிக்கப்பட்ட கௌரவிப்புக்கள், வரவேற்புகள், பரிசில்கள் மகிழ்ச்சியை தந்தது.

எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். பாடகியாகி அதன் மூலம் பலருக்கும் உதவ வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்தார்.