11 நாட்களில் 85 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

47 0
யுக்திய விசேட நடவடிக்கையின்போது 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார்  85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (31) தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.