யாழ். மக்களின் வரவேற்பை கண்டு நெகிழ்ச்சி அடைகின்றேன்: ஈழத்து குயில் கில்மிஷா

58 0

தனது வெற்றிக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், யாழ் மக்களின் வரவேற்பை கண்டு நெகிழ்ச்சியடைவதாகவும்  இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து நேற்று நாடுதிரும்பிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.

மேலும், தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.

யாழ். மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், நாட்டின் ஜனாதிபதி தனக்கு வாழ்த்து தெரிவித்தமை குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.