திஸ்ஸமஹாராமயில் புதையல் தோண்டிய மூவர் கைது

71 0

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட மூவர் புதையல் தோண்டப் பயன்படுத்திய பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை பிரதேசத்தை சேர்ந்த கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் மற்றும் மதவெல பிரதேசத்தை சேர்ந்த மேசன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தருக்கு சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு புதையல் தோண்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.