மட்டக்களப்பில் மாணவன் உட்பட மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது

50 0

யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட மூன்று இளைஞர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர தர உயர் தரத்தில் கல்வி பயிலும் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவரிடமிருந்து ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  பெரிய உப்போடை மற்றும் இருதயபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் ஐஸ் போதை பொருளுடன் கைதானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.