காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக.. (காணொளி)

351 0

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தீர்வின்றி 40ஆவது நாளாக தொடரும் நிலையில், நாளாந்தம் பல்வேறு தரப்பினர் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நாளாந்தம் பல்வேறு அமைப்பினரும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தமக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக, இரவு, பகலாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த பெப்வரி மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.