பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும்(காணொளி)

298 0

கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது.

கிளிநொச்சி – பன்னங்கண்டியில் சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான உறுதி, அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத் திட்டம் என்பனவற்றை வழங்குமாறு கோரி கடந்த 22ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அடிப்படை உரிமை இல்லாத மக்களாக இவ்வளவு காலமும் வாழ்ந்து விட்டோம், இனியும் எம்மால் அவ்வாறு வாழ முடியாது, தயவு செய்து எமக்கான காணி உரிமத்தை வழங்குங்கள் என்று கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவா பசுபதி கிராமத்திற்கு வழங்கப்பட்ட தீர்வு போன்று தமக்கும் திர்வு வழங்குமாறு சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.