தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி(காணொளி)

347 0

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா நகர மத்தியில் உள்ள இலங்கை தமிழரசுகட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலைக்கு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசு கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுகாதார அமைச்சரால் நினைவுரையும் நடாத்தப்பட்டது.

இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.