களுத்துறை சிறையில் தாக்கப்பட்டவர் உயிரிழந்தார்!

36 0
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

46 வயதுடைய கைதி  ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சிறைச்சாலையில் இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (24) நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்ற நிலையில் இன்று  உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.