யாழில்14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

63 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று நேற்று (24.12.2023) மீட்கப்பட்டுள்ளது.குறித்த சாக்கு மூட்டையினை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.