மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகள் மூளைக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த சிறையில் உள்ள கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மூளை காய்ச்சலுக்கு உள்ளான 3 கைதிகளும் மாத்தறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

