அங்கொடையின் பிரபல குற்றவாளி கும்பலில் ஒருவரான “மினி ஒலுவா“ எனப்படும் சந்தேக நபர் ஒருவர் கொத்தடுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொத்தடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாடசாலைகளுக்கு அண்மித்ததாக போதைப்பொருள் சோதனை நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது.
சோதனையின் போது பிரதான சந்தேக நபருடன் இருந்த மேலும் 3 பேரும் இவர்கள் தவிர, மேலும் போதைப்பொருள் தொடர்பில் 18 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் சந்தேக நபர்களில் நால்வரை காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கொத்தடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

